பொன்னை தேடினோம் பயம் வந்தது
பொருளை தேடினோம் போகம் வந்தது
புகழை தேடினோம் போதை வந்தது
தன்னை தேட ஞானம் வந்தது !
உடல் இயக்கங்களின் ஆசனங்களின் பங்கு பற்றி இந்த தொடரில் இன்று பார்ப்போம்.
நாம் முழுமையாக அறிந்து தெளிய உதவும் ஆசனங்களையும் தெரிந்து கொள்வோம்.
பத்மாசனம்
பத்மாசனத்தில் அமரும் போது இரு பாதங்களும் மேல் நோக்கி நேராக உச்சி முதல் பாதம் வரை இயங்கும். உடலின் நரம்பு மண்டலங்கள் சீரான இயக்கம் காணும், இதனால் இரத்த ஓட்டம் தங்குதடையின்றி நடைபெறும். உடல் அகத்தில் உள்ள ஒளியை ஒன்று சேர்த்து உணர்வைப் பலமாக உணர்த்த வழிவகை செய்யும், இதனால் தேகத்தில் காந்தி ஏற்படும். மேலும் உள் ஒளி கிளம்ப சுவாதிஷ்டானம் பகுதியில் உள்ள இடகலை, பிங்கலை நரம்பு மண்டலங்களை இயக்கி சுழி முனையில் உள்ள அதிர்வை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக சிந்தித்தல் என்கிற நிகழ்வு பலமாகி பிரம்மம், ஸ்ருஷ்டி, வெட்டவெளி, இயக்கங்களை மிக எளிதாக உணர வழிவகை செய்யும். மேலும் உலகில் உயிர்களின் செயல்களையும், இயக்கங்களையும் அறிய உதவும். இந்த ஆசனம் கைகூடி நீண்ட நேரம் அமர, குருவிடம் முறையாக உபதேசம் பெட்டரவர்கள், கூடு விட்டு கூடு பாய்தல் என்கிற நிலையை எளிதாக அறியலாம் அல்லது அடையலாம்.